விளையாட்டு
கே.எல். ராகுல்

3-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- அணியில் 4 மாற்றம்

Published On 2022-01-23 08:11 GMT   |   Update On 2022-01-23 08:49 GMT
கேப் டவுனில் நடைபெறும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியில் ஜயந்த் யாதவ், சூர்யகுமார் யாதவ், பிரசித் கிருஷ்ணா, தீபக் சாஹர் ஆகிய நான்கு பேர் அணியில் இடம் பிடித்துள்ளனர். 

அஸ்வின், ஷர்துல் தாகூர், வெங்கடேஷ் அய்யர் நீக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News