விளையாட்டு
கிறிஸ் மோரிஸ்

பிரபல தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஓய்வு அறிவிப்பு

Published On 2022-01-11 10:03 GMT   |   Update On 2022-01-11 10:03 GMT
தென் ஆப்ரிக்காவின் உள்ளூர் கிரிக்கெட் அணியான டைடன்ஸுக்கு பயிற்சியாளராக செயல்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கேப் டவுன்:

பிரபல தென் ஆப்ரிக்க ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அனைத்து போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர், தென் ஆப்ரிக்காவின் உள்ளூர் அணியான டைடன்ஸுக்கு பயிற்சியாளராக செயல்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

2012-ம் ஆண்டு கிரிக்கெட்டில் அறிமுகமான கிறிஸ் மோரிஸ், இதுவரை 4 டெஸ்ட், 42 ஒருநாள் மற்றும் 23 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 

இதில் டெஸ்ட்டில் 459 ரன்கள் 12 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டியில் 1756 ரன்கள், 48 விக்கெட்டுகள் மற்றும் சர்வதேச டி20 போட்டியில் 697 ரன்கள், 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.



ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காகவும் கிறிஸ் மோரிஸ் விளையாடி உள்ளார். 81 ஐபிஎல் போட்டிகளில் 618 ரன்கள் குவித்ததோடு, 95 விக்கெட்டுகளையும் விழ்த்தியுள்ளார்.

மேலும், ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை கிறிஸ் மோரிஸ் பெற்றுள்ளார். ஐபிஎல் 2021 ஏலத்தில் 16.25 கோடிக்கு மோரிஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News