விளையாட்டு
கால்பந்து புகழ் மெஸ்சிக்கு கொரோனா தொற்று
பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வரும் அர்ஜென்டினாவின் முன்னணி கால்பந்து வீரர் மெஸ்சி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணி பாரிஸ் செயின்ட் ஜெர்மைன். பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த உலக கால்பந்து புகழ் மெஸ்சி, இந்த சீசனில் இருந்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அணியில் நெய்மர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
பி.எஸ்.ஜி. அணி நாளை இரவு பிரெஞ்ச் கோப்பைக்கான போட்டியில் விளையாடி இருக்கிறார். இந்த நிலையில் மெஸ்சி உள்பட நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பி.எஸ்.ஜி. அறிவித்துள்ளது.
மெஸ்சியடன் ஜுயன் பெர்னாட், செர்ஜியோ ரிகோ, நாதன் பிட்டுமாஜாலா ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.