விளையாட்டு
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த தென் ஆப்பிரிக்க வீரர்
செஞ்சூரியன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தோல்வி அடைந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செஞ்சூரியன்:
தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா தென் ஆப்பிரிக்காவை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வி தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், விக்கெட் கீப்பருமான குயின்டன் டி காக் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த ஓய்வு முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் 3,300 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 5,355 ரன்களும், டி20 கிரிக்கெட் போட்டிகளில் 1,827 ரன்களும் குவித்துள்ளார்.
குயின்டன் டி காக்கின் மனைவி சாஷாவுக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளது. எனவே அவர் தனது குடும்பத்துடன் நேரம் செலவழிக்க விரும்புகிறார். இதனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் என தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்...கடைசி மூன்று ‘பாக்சிங் டே’ டெஸ்டிலும் இந்திய அணி அசத்தல்