விளையாட்டு
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: கே.எல் ராகுல் சதம் விளாசி அபாரம்
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளார்.
செஞ்சுரியன்:
இந்தியா- தென்., ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, 90 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் நிதானமாக ஆடி சதம் விளாசியுள்ளார்.
கே எல் ராகுல் 110 ரன்கள், ரஹானே 26 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.