விளையாட்டு
ஹர்பஜன்சிங்

முதல் முறையாக தென்ஆப்பிரிக்காவில் தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு - ஹர்பஜன்சிங்

Published On 2021-12-09 06:28 GMT   |   Update On 2021-12-09 06:28 GMT
கடந்த முறை இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சென்றபோது டிவில்லியர்ஸ், டுபெலிசிஸ் போன்ற வீரர்கள் தொடரை வெல்ல தடையாக இருந்தார்கள் என ஹர்பஜன்சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்ல வாய்ப்பு இருப்பதாக முன்னாள் சுழற்பந்துவீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, கடந்த முறை இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சென்றபோது டிவில்லியர்ஸ், டுபெலிசிஸ் போன்ற வீரர்கள் தொடரை வெல்ல தடையாக இருந்தார்கள்.

தற்போதுள்ள தென் ஆப்பிரிக்கா அணி வலுவாக இல்லை. இதனால் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்ற நல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்திய அணி புதிய வரலாறு படைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

Tags:    

Similar News