செய்திகள்
பி.வி.சிந்து

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் - அரையிறுதியில் பி.வி.சிந்து தோல்வி

Published On 2021-11-28 00:17 GMT   |   Update On 2021-11-28 00:17 GMT
ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி இந்தோனேசிய ஜோடியிடம் தோற்று ஏமாற்றம் அளித்தது.
பாலி:

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் உலக சாம்பியனும், தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, முன்னாள் உலக சாம்பியனும், 8-ம் நிலை வீராங்கனையுமான ராட்சனோக் இன்டானோனை (தாய்லாந்து) சந்தித்தார். 

இதில், பி.வி.சிந்து 21-15, 9-21, 14-21 என்ற செட் கணக்கில் ராட்சனோக்கிடம் வீழ்ந்து தோல்வியைச் சந்தித்தார்.

சமீபத்தில் நடந்த இந்தோனேசியா மாஸ்டர்ஸ், பிரெஞ்சு ஓபன் போட்டியிலும் பி.வி.சிந்து அரையிறுதியில் தோற்று வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News