செய்திகள்
நீரஜ் சோப்ராவுக்கு ரூ. 1 கோடி வழங்கிய சி.எஸ்.கே.

நீரஜ் சோப்ராவுக்கு ரூ. 1 கோடி வழங்கிய சி.எஸ்.கே.

Published On 2021-11-01 08:16 GMT   |   Update On 2021-11-01 08:16 GMT
ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்ததை குறிக்கும் வகையில் ‘8758’ என்ற எண் பொறிக்கப்பட்ட விசே‌ஷ சீருடையும் அவருக்கு நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.

புதுடெல்லி:

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ரூ. 1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் அறிவித்து இருந்தது. 

அதன்படி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவரிடம் ரூ. 1 கோடிக்கான காசோலையை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன், சேர்மன் ஆர்.சீனிவாசன் ஆகியோர் வழங்கினர். 

ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்ததை குறிக்கும் வகையில் ‘8758’ என்ற எண் பொறிக்கப்பட்ட விசே‌ஷ சீருடையும் அவருக்கு நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News