செய்திகள்
டி20 உலகக் கோப்பை- ஆஸ்திரேலியாவுக்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.
துபாய்:
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.
குசால் பெரேரா, அசலங்கா தலா 35 ரன்கள் எடுத்தனர். அதிரடியாக ஆடிய பனுகா ராஜபக்ச 26 பந்துகளில் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கிறது.