செய்திகள்
மாநில ஜூனியர் வாள்வீச்சு: சென்னை அணிகள் அறிவிப்பு
மாநில ஜூனியர் வாள்வீச்சில் பங்கேற்கும் சென்னை அணிகளை மாவட்ட வாள்வீச்சு சங்கத் தலைவர் தனசேகரன் அறிவித்துள்ளார்.
சென்னை:
29-வது மாநில ஜூனியர் (20 வயதுக்குட்பட்டோர்) வாள்வீச்சு போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வருகிற 30 மற்றும் 31-ந் தேதிகளில் நடக்கிறது.
சிறுமிகளுக்கு சனிக்கிழமையும், சிறுவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்கும் சென்னை அணிகளை சென்னை மாவட்ட வாள்வீச்சு சங்கத் தலைவர் தனசேகரன் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
ஆண்கள்: கிளாட்வின், பிரபஞ்சன், ராதாகிருஷ்ணன், தருனேஷ் (பாயில் பிரிவு), ரிஷி, சரவணன், பாலவிக்னேஷ், மதேஸ்வர் (எப்பி), ஆதித்ய மணிகண்டன், ஜெய்சக்தி, அரவிந்தன், தனுஷ் மணிகண்டன் (சப்ரே).
பெண்கள்: விபுஷா, திவ்யதர்ஷினி, ஜாய்ஸ் அசிதா, மரியா (பாயில்), ஜனனி, ரஸ்மிகா, பவித்ரா, பொற்செல்வி (எப்பி), தரணி சசி பிரபா, ரம்யா (சப்ரே).