செய்திகள்
சைக்கிள் போட்டி விபத்து

பார்வையாளர்களால் சைக்கிள் பந்தைய வீரர்களுக்கு நிகழ்ந்த பரிதாப நிலை

Published On 2021-06-27 16:50 IST   |   Update On 2021-06-27 16:50:00 IST
சைக்கிள் பந்தையத்தின்போது திடீரென ரசிகர்கள் ஓடும்பாதைக்குகள் நுழைய போட்டியாளர்கள் வரிசையாக கீழே விழுந்து காயத்துடன் உயிர் பிழைத்த சம்பவம் பிரான்ஸில் நிகழ்ந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் 45 கி.மீட்டர் தூரத்தை கடக்கும் சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் போட்டி தொடங்கியதும் சைக்கிளை ஓட்டி வேகமாக செல்ல முயன்றனர்.

இந்த போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஏராளமான ரசிகர்கள், ரசிகைகள் கையில் பதாதைகள் ஏந்தி நின்றனர். டி.வி.யில் தங்களுடைய முகம் தெரிய வேண்டும் என்பதற்கான திடீரென ஓடும்பாதையின் அருகில் வந்துவிட்டனர். அப்படி வந்த ரசிகர் ஒருவர் டோனி மார்ட்டின் என்ற வீரர் சைக்களில் மீது மோதினார். இதனால் டோனி மார்ட்டின் தடுமாறி கீழே விழுந்தார். அதனைத் தொடர்ந்து வரிசையாக ஏராளமான வீரர்கள் சைக்கிளுடன் கீழே விழுந்தனர்.

இதில் ஏராளமான வீரர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மேலும், சில வீரர்களும் எழும்பு முறிவும் ஏற்பட்டது. ரசிகர்களால் வீரர்கள் படுகாயம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

Similar News