செய்திகள்
அமித் பங்கால்

உலகின் நம்பர்-1 வீரராக டோக்கியோ ஒலிம்பிக்கில் களமிறங்கும் இந்திய குத்துச்சண்டை வீரர்

Published On 2021-06-27 11:38 IST   |   Update On 2021-06-27 11:38:00 IST
நம்பர்-1 வீரர் என்ற அந்தஸ்துடன் களமிறங்கும் அமித் பங்கால், காலிறுதி வரை எந்தவொரு வலுவான சவாலையும் எதிர்கொள்ள வாய்ப்பில்லை.
புதுடெல்லி:

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்கிறது. குத்துச்சண்டை போட்டிகள் ஜூலை 24ம்தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில், இந்தியா சார்பில் 9 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இவர்களில் ஆசிய சாம்பியனும், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான அமித் பங்கால், உலகின் நம்பர்-1 வீரர் என்ற அந்தஸ்துடன் போட்டியில் களமிறங்குகிறார். இவர் ஆடவருக்கான பிளைவெயிட் 52 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க உள்ளார்.

அமித் பங்கால் தவிர, பிரான்சின் பிலால் பென்னாமா, அல்ஜீரியாவின் முகமது பிலிசிஇ சினாவின் ஹூ ஜியாங்குவான், உஸ்பெகிஸ்தான் வீரர் ஷகோபிதின் ஜாய்ரோவ் ஆகியோர் டாப்-5 இடங்களில் உள்ளனர். 

இவர்களில், பென்னாமா, ஜியாங்குவானை தலா ஒரு முறை அமித் பங்கால் வீழ்த்தி உள்ளார். ஜாய்ரோவுடன் மோதிய 3 போட்டிகளிலும் பங்கால் தோல்வி அடைந்துள்ளார். 

நம்பர்-1 என்ற தரவரிசையானது, பங்காலுக்கு ஒலிம்பிக்கில் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும். காலிறுதி வரை அவர் எந்தவொரு வலுவான சவாலையும் எதிர்கொள்ள வாய்ப்பில்லை. தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் உள்ள வீரர்கள், காலிறுதிக்கு முன்பு நேருக்குநேர் மோதமாட்டார்கள். 

Similar News