செய்திகள்
ஷுப்மான் கில்

ஐபிஎல் தொடர் முடிவில் ஷுப்மான் கில் அதிக ரன்கள் அடித்தவர்களில் ஒருவராக இருப்பார்: டேவிட் ஹசி

Published On 2021-04-25 10:42 GMT   |   Update On 2021-04-25 10:42 GMT
ஷுப்மான் கில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை ஆலோசகர் டேவிட் ஹசி ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடஸ் அணியில் தொடக்க வீரராக ஷுப்மான் கில் களம் இறங்கி விளையாடி வருகிறார். இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கடைசி இடத்தில் உள்ளது. இனிவரும் 9 போட்டிகளும் அந்த அணிக்கு முக்கியமானவை.

கொல்கத்தா விளையாடி ஆறு போட்டிகளிலும் ஷுப்மான் கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 19 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து தேவையில்லாமல் ரன்அவுட் ஆனார்.

அவர் மீது விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அந்த அணியின் தலைமை ஆலோசகர் டேவிட் ஹசி, ஷுப்மான் கில்லுக்கு ஆதரவாக உள்ளார். ஐபிஎல் தொடர் முடிவடையும்போது அதிக ரன்கள் அடித்தவர்களில் ஒருவராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

‘‘ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அபாரமான விளையாடினார். வலைப்பயிற்சியில் அவர் பயிற்சி பெறுவதை பார்க்கும்போது மிகவும் சிறப்பானவர். பயிற்சிக்கான சிறந்த நெறிமுறையை பெற்றுள்ளார். அவருடைய கிளாஸ் பேட்டிங் அப்படியே இருக்கும். ஆடுகளத்திற்கு வெளியே தனிப்பட்ட சிறப்பாக இருக்கிறார். தனிப்பட்ட வீரராக இந்த ஐபிஎல் தொடர் முடிவடையும்போது அதிக ரன்கள் அடித்த வீரர்களில் ஒருவராக இருப்பார்’’ என்றார்.
Tags:    

Similar News