செய்திகள்
கிறிஸ் வோக்ஸ், ஹெட்மையர்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் இணைந்தனர் அஷ்வின், அக்சார் பட்டேல், கிறிஸ் வோக்ஸ்

Published On 2021-03-29 11:17 GMT   |   Update On 2021-03-29 11:17 GMT
ஐபிஎல் 2021 சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஏப்ரல் 10-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 9-ந்தேதி தொடங்குகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆறு மைதானங்களில் மட்டுமே போட்டி நடைபெறுகிறது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. அதன்பின் ஐபிஎல் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் அந்தந்த அணிகளும் இணைய தயாராகி வருகின்றனர்.

வீரர்கள் ஒருவாரம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். டெல்லி அணி தற்போது மும்பையில் உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய அஷ்வின், அக்சார் பட்டேல் ஆகியோர் இன்று டெல்லி அணி தங்கியுள்ள ஓட்டல் சென்றடைந்தனர்.



அதேபோல் இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் அணியில் இணைந்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஹெட்மையரும் அணியுடன் இணைந்துள்ளார்.

அதேபோல் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் அணியில் இணைந்துள்ளார்.
Tags:    

Similar News