செய்திகள்
மேக்ஸ்வெல்

மேக்ஸ்வெல்லை ரூ. 14.25 கோடிக்கு ஏலம் எடுத்த ஆர்சிபி: ஸ்டீவ் ஸ்மித்துக்கு ரூ. 2.2 கோடி

Published On 2021-02-18 15:39 IST   |   Update On 2021-02-18 15:39:00 IST
ஐபிஎல் ஏலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல்லை ஆர்சிபி 14.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. ஸ்மித்தை 2.2 கோடி ரூபாய் கொடுத்து டெல்லி அணி வாங்கியுள்ளது.
ஐபிஎல் சீசன் 2021-க்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. 8 அணிகளும் 139 வீரர்களை தக்கவைத்துள்ளது. 57 வீரர்களை விடுவித்துள்ளது. 292 வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள்.

இன்றைய ஏலத்தில் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஜேசன் ராய், அலேக்ஸ் ஹேல்ஸ் போன்ற வீரர்கள் எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஸ்மித்தை 2.2 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி ஏலம் எடுத்தது. மேக்ஸ் வெல்லை ஏலம் எடுக்க சென்னை - ஆர்சிபி அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இறுதியில் ஆர்சிபி 14.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

கருண்நாயர் -  எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை

அலேக்ஸ் ஹேல்ஸ் - எந்த அணியும்  ஏலம் எடுக்கவில்லை

ஜேசன் ராய் - எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை

ஸ்டீவ் ஸ்மித் - ரூ. 2.20 கோடி - டெல்லி கேப்பிட்டல்ஸ்

ஆரோன் பிஞ்ச் - எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை

ஹனுமா விஹாரி - எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை 

மேக்ஸ்வெல் ரூ. 14.25 கோடி- ஆர்சிபி #IPLAuction #IPLAuction2021

Similar News