செய்திகள்
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்து

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சமீர் வர்மா வெளியேற்றம்

Published On 2021-01-23 00:18 GMT   |   Update On 2021-01-23 00:18 GMT
தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சமீர் வர்மா ஆகியோர் தோல்வி அடைந்து வெளியேறினர்.
பாங்காக்:

டோயோட்டா தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 13-21, 9-21 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் ராட்சனோக் இன்டானோனிடம் (தாய்லாந்து) 38 நிமிடங்களில் தோற்று வெளியேறினார்.

ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சமீர் வர்மா 13-21, 21-19, 20-22 என்ற செட் கணக்கில் 3-ம் நிலை வீரர் ஆன்டெர்ஸ் ஆன்டன்செனிடம் (டென்மார்க்) போராடி வீழ்ந்தார். இந்த ஆட்டம் 1 மணி 22 நிமிடங்கள் நீடித்தது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்த நிலையில் ஆண்கள் இரட்டையரில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி, கலப்பு இரட்டையரில் சாய்ராஜ்-அஸ்வினி ஜோடிகள் அரைஇறுதிக்கு முன்னேறி ஆறுதல் அளித்துள்ளன.
Tags:    

Similar News