செய்திகள்
டீம் இந்தியா

சென்னை சேப்பாக்கம் டெஸ்ட் போட்டிகளை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

Published On 2021-01-22 16:35 GMT   |   Update On 2021-01-22 17:42 GMT
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5-ம்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி பிப்ரவரி 17-ந்தேதி தொடங்குகிறது.

கொரோனா தொற்றுக்குப்பின் இந்தியாவில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். மத்திய அரசு திறந்தவெளி மைதானங்களில் 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

இதனால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. இந்த நிலையில் இரண்டு போட்டிகளிலும் கொரோனா வைரஸ் தொற்று முன்தடுப்பு நடவடிக்கையாக ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என தமிழக கிரிக்கெட் செயலாளர் ஆர்.எஸ். ராமசாமி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News