செய்திகள்
அஸ்வின்

மெல்போர்னில் பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்

Published On 2020-12-23 10:31 GMT   |   Update On 2020-12-23 10:31 GMT
அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவினாலும் இந்திய கிரிக்கெட அணி வீரர்கள் மெல்போர்ன் போட்டிக்கு தயாராகும் வகையில் இன்று பயிற்சியை மேற்கொண்டனர்.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது அடிலெய்டில் கடந்த 17-ந்தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் 20-ந்தேதியிலேயே முடிவடைந்து விட்டது.



2-வது டெஸ்ட் மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்டாக 26-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி வீரர்கள் மெல்போர்ன் சென்றடைந்தனர்.



இன்று வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டனர். ஷுப்மான் கில் நீண்ட நேர பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டார். ஜடேஜா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் பவுலிங் செய்தனர். புஜாரா உள்பட பேட்ஸ்மேன்கள் பயிற்சி மேற்கொள்ள பொறுப்பு கேப்டன் ரஹானே, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மேற்பார்வையிட்டனர்.
Tags:    

Similar News