செய்திகள்
ஜியானி இன்பான்டினோ

‘பிபா’ தலைவர் கொரோனாவால் பாதிப்பு

Published On 2020-10-28 01:04 IST   |   Update On 2020-10-28 01:04:00 IST
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைவரான ஜியானி இன்பான்டினோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
சூரிச்:

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைவரான ஜியானி இன்பான்டினோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் நேற்று உறுதி செய்யப்பட்டது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த 50 வயதான அவர் வீட்டில் 10 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடித்து வருகிறார். அவரை கடந்த சில நாட்களில் சந்தித்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளுமாறு ‘பிபா’ வேண்டுகோள் விடுத்துள்ளது.

Similar News