செய்திகள்
கிறிஸ் கெய்ல்

ஓய்வு வேண்டாம்: இளைய வீரர்கள் கூறியதாக கிறிஸ் கெய்ல் தகவல்

Published On 2020-10-27 10:34 GMT   |   Update On 2020-10-27 10:34 GMT
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் 41 வயதான கிறிஸ் கெய்ல், ஓய்வு குறித்து பஞ்சாப் இளம் வீரர்கள் சொன்னது என்ன? என்பதை தெரிவித்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படுபவர் கிறிஸ் கெய்ல். தலைசிறந்த அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தார். தற்போது 41 வயதானாலும் பஞ்சாப் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக 25 பந்தில் அரைசதம் அடித்து பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்ததோடு, ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.

41 வயதாகும் கிறிஸ் கெய்லை சுற்றி ஓய்வு எப்போது? என்ற கேள்வி சுற்றிக்கொண்டே வருகிறது. நேற்றைய போட்டிக்குப்பின் கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘போட்டியின்போது பயிற்சியாளர் சீனியர் வீரர்களிடம் முக்கியமான போட்டியில் சிறப்பாக விளையாடுவது அவசியம் என்றனர். நாங்கள் சிறப்பாக விளையாடியதற்கான மகிழ்ச்சி அடைகிறேன். அணியில் உள்ள இளம் வீரர்கள் என்னிடம் ஓய்வு வேண்டாம்  என்று சொல்கிறார்கள்’’ என்றார்.
Tags:    

Similar News