செய்திகள்
கைது செய்யப்பட்டவர்களுடன் போலீஸ் அதிகாரிகள்

ஐபிஎல் போட்டிகள் மீது சூதாட்டம்- உத்தர பிரதேசத்தில் 5 பேர் கைது

Published On 2020-10-18 02:47 GMT   |   Update On 2020-10-18 02:47 GMT
ஐபிஎல் போட்டிகளை மையமாக வைத்து உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரயாக்ராஜ்:

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து சிலர் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தகவலை உறுதி செய்த போலீசார், நேற்று பாபமாவ் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி 5 பேரை கைது செய்தனர். அவர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் சூதாட்டத்திற்குப் பயன்படுத்திய 6 செல்போன்கள் 1 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் அவர்களின் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News