செய்திகள்
இஷாந்த் சர்மா

இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்திய இஷாந்த் சர்மாவின் காயம்

Published On 2020-10-12 14:35 GMT   |   Update On 2020-10-12 14:35 GMT
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இஷாந்த் சர்மா காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதால் இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா. இவர் ஐபிஎல் தொடரில் இசாந்த் சர்மா டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார். தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே காயத்தால் அவதிப்பட்டதால் டெல்லி அணிக்காக தொடர்ந்து விளையடவில்லை.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக மட்டுமே விளையாடினார். இந்நிலையில் கடந்த 7-ந்தேதி பயிற்சி செசன் போது இசாந்த் ஷர்மாவின் இடது பக்கம் விலா எலும்பில் வலி ஏற்பட்டதாக டெல்லி அணி தெரிவித்துள்ளது. ஏற்கனவே தசை நார் கிழிந்து அவதிப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்த உடன் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்கிறார். ஒருவேளை காயம் சரியாகவில்லை என்றால் இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பாக இருக்கும்.
Tags:    

Similar News