செய்திகள்
தந்தை எம்எஸ் டோனியுடன் ஜிவா

எம்எஸ் டோனி மகள் ஜிவாவுக்கு மிரட்டல் விடுத்த 16 வயது நபர் கைது

Published On 2020-10-11 16:57 GMT   |   Update On 2020-10-11 16:57 GMT
எம்எஸ் டோனி ஐபிஎல் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவரது மகள் ஜிவாவுக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா கிரிக்கெட் மீது அதிக பேரார்வம் கொண்ட நாடு. இங்கு கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம். ஒருவரை பிடித்த வீரராக ரசிர்கள் ஏற்றுக் கொண்டால் அவர்கள் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள். அதேபோல் அந்த வீரர் சரியாக விளையாடவில்லை என்றாலும் கடுமையாக விமர்சிப்பார்கள்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 7 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக மோசமாக விளையாடியது. அதன்பின் ஆர்சிபிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது.

குறிப்பாக எம்.எஸ். டோனியின் ஆட்டம் சரியாக அமையவில்லை. இதனால் கோபம் அடைந்த ரசிகர்களில் பலர் எல்லைத் தாண்டியுள்ளனர். டோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஸ்கீரின்சாட் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பரவ விட்டுள்ளனர். அதற்கு வரும் கருத்துகள் மிகவும் மோசமாகவும், கொடூரமாகவும் உள்ளன. அதில் இரண்டு பேர் எல்லையை மீறி கருத்து தெரிவித்துள்ளனர்.

யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு டோனி மகள் ஜிவாவுக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ராஞ்சி போலீசில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்நிலையில் சமூக இணைய தளத்தில் மிரட்டல் விடுத்ததாக குஜராத் மாநிலம் குச் பகுதியில் உள்ள நாம்னா கபாயா கிராமத்தைச்சேர்ந்த 16 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜிவாவுக்கு மிரட்டல் விடுத்தது குறித்து ராஞ்சி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளதால் அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறார்.
Tags:    

Similar News