செய்திகள்
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி

30-ந்தேதி ஒருநாள் போட்டி: 20-ந்தேதி பாக். சென்றடைகிறது ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி

Published On 2020-10-11 14:42 GMT   |   Update On 2020-10-11 14:42 GMT
மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே அணி வருகிற 20-ந்தேதி பாகிஸ்தான் சென்றடைகிறது.
ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அக்டோபர் 30-ந்தேதி ராவல் பிண்டியில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதற்காக 20 பேர் கொண்ட ஜிம்பாப்வே அணி 20-ந்தேதி பாகிஸ்தான் சென்றடைகிறது.

21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தனிமைப்படுத்திக் கொள்கிறது. அதன்பின் 28 மற்றும் 29-ந்தேதிகளில் பயிற்சி மேற்கொள்கிறது.

ஒருநாள் தொடர் அக்டோபர் 30-ந்தேதி, நவம்பர் 1-ந்தேதி மற்றும் 3-ந்தேதிகளில் நடக்கிறது. டி20 தொடர் நவம்பர் 7-ந்தேதி, 8-ந்தேதி மற்றும் 10-ந்தேதி நடக்கிறது.

டி20 கிரிக்கெட் போட்டிகள் நவம்பர் 7-ந்தேதி, 8-ந்தேதி மற்றும் 10-ந்தேதிகளில் நடக்கிறது. தொடர் முடிந்ததும் 12-ந்தேதி ஜிம்பாப்வே புறப்படுகிறது.
Tags:    

Similar News