செய்திகள்
பெங்களூர் அணி இந்த ஆண்டு சமபலத்துடன் இருக்கிறது- சாஹல் சொல்கிறார்
இந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சம பலத்துடன் உள்ளதாக அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார்.
அபுதாபி:
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி 3 ஆட்டத்தில் 2 வெற்றி 1 தோல்வி பெற்று 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி நாளை ராஜஸ்தானுடன் மோதுகிறது.
இந்தநிலையில் பெங்களூர் அணி சம பலத்துடன் உள்ளதாக அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு நாங்கள் சீரான, சமபலத்துடனான அணியை பெற்றிருக்கிறோம். குறிப்பாக பந்துவீச்சில் சிறந்த நிலையில் இருக்கிறோம். 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்று இந்த ஆண்டு நாங்கள் மிகவும் சாதகமாக இருக்கிறோம். வீராட்கோலி மற்றும் டிவில்லியர்ஸ் உள்பட அணியில் உள்ள அனைவருக்கும் வித்தியாசமான உணர்வு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.