செய்திகள்
சாஹல்

பெங்களூர் அணி இந்த ஆண்டு சமபலத்துடன் இருக்கிறது- சாஹல் சொல்கிறார்

Published On 2020-10-02 09:18 GMT   |   Update On 2020-10-02 09:18 GMT
இந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சம பலத்துடன் உள்ளதாக அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார்.

அபுதாபி:

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி 3 ஆட்டத்தில் 2 வெற்றி 1 தோல்வி பெற்று 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி நாளை ராஜஸ்தானுடன் மோதுகிறது.

இந்தநிலையில் பெங்களூர் அணி சம பலத்துடன் உள்ளதாக அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு நாங்கள் சீரான, சமபலத்துடனான அணியை பெற்றிருக்கிறோம். குறிப்பாக பந்துவீச்சில் சிறந்த நிலையில் இருக்கிறோம். 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்று இந்த ஆண்டு நாங்கள் மிகவும் சாதகமாக இருக்கிறோம். வீராட்கோலி மற்றும் டிவில்லியர்ஸ் உள்பட அணியில் உள்ள அனைவருக்கும் வித்தியாசமான உணர்வு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

 

2016-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியின் போது இருந்த உணர்வுபோல் தற்போது இருக்கிறது. இந்த ஆண்டு சிறப்பாக தொடங்கி இருப்பது அணிக்கு புத்துணர்ச்சியை அளித்து இருக்கிறது. நான் அணியில் விளையாடுகிறேனோ இல்லையோ எனது நோக்கம். பெங்களூர் அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுப்பதுதான்.

 

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News