செய்திகள்
விளையாட்டு மைதானங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது: தமிழக அரசு
ஆரம்ப கட்டத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் உள்பட விளையாட்டு மைதானங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் விளையாட்டு மைதானங்களை திறப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
விளையாட்டு மைதானங்களுக்குள் ஆரம்ப கட்டத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியதாவது:-
* விளையாட்டு மைதானங்களுக்குள் ஆரம்ப கட்டத்தில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி.
* உடல்வெப்ப பரிசோதனை செய்த பிறகே மைதானங்களுக்குள் அனுமதி.
* மைதானங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் எச்சில் துப்ப தடை.
* மைதானங்களில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் அனுமதி இல்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.