செய்திகள்
இங்கிலாந்து தொடரில் இருந்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி விலகியது ஏன்? - வாரிய நிர்வாகி விளக்கம்
இங்கிலாந்து தொடரில் இருந்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி விலகியது தொடர்பாக வாரிய உயர் கமிட்டி உறுப்பினருமான சாந்தா ரங்கசாமி கருத்து தெரிவித்தார்
புதுடெல்லி:
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இந்த மாதம் மற்றும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் விளையாட திட்டமிட்டு இருந்தது. அத்துடன் அங்கு இந்தியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய 3 நாடுகள் இடையிலான பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியும் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்து போட்டி தொடரில் இருந்து இந்திய பெண்கள் அணி விலகியது. இதனால் 3 நாடுகள் போட்டியும் ரத்து செய்யப்பட்டது.
இதனால் இந்திய பெண்கள் அணியின் விஷயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் அலட்சியமாக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நியூசிலாந்தில் பெண்கள் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்திய பெண்கள் அணி அந்த போட்டிக்கு தயாராகுவதில் இந்திய கிரிக்கெட் வாரியம் உரிய கவனம் செலுத்தாமல் இருப்பதாக கிளம்பி இருக்கும் புகார் குறித்து இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய உயர் கமிட்டி உறுப்பினருமான சாந்தா ரங்கசாமி கருத்து தெரிவிக்கையில், ‘இங்கிலாந்து தொடரில் இருந்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி விலகியதற்கு அலட்சியம் காரணம் கிடையாது. வீராங்கனைகள் போட்டிக்கான உடல் தகுதியை எட்ட குறைந்தபட்சம் 6 வார காலமாவது பயிற்சி பெற வேண்டியது அவசியமானதாகும். நமது நாட்டின் பெரும் பகுதி கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தற்போது கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம் நடத்துவது என்பது முடியாத காரியம். அத்துடன் இங்கிலாந்தில் 14 நாட்கள் வீராங்கனைகள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். கொரோனா தாக்கத்தால் உலக கிரிக்கெட் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் பெண்கள் கிரிக்கெட் மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.
இயற்கை கூட பெண்கள் கிரிக்கெட்டுக்கு எதிராக சதி செய்வது போல் தான் தெரிகிறது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. அத்துடன் ஐ.பி.எல். போட்டி நடைபெறும் சமயத்தில் தான் பிக்பாஷ் பெண்கள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அரங்கேறுகிறது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியின் போது பெண்கள் கண்காட்சி போட்டி நடைபெறுமா? என்பது தெரியவில்லை.
ஐ.பி.எல். நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறும் பெண்கள் உலக கோப்பை போட்டிக்கு தயாராக இங்கிலாந்து தொடர் முக்கியமானதாகும். கொரோனா பாதிப்பால் தற்போது நிலவும் சூழ்நிலையில் பெண்கள் கிரிக்கெட் மீதான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஈடுபாடு குறித்து சந்தேகம் கொள்ளக்கூடாது. தற்போது எந்த முடிவுக்கும் வராமல் நிலைமை சீராகும் வரை காத்து இருக்க வேண்டும்’ என்று கூறினார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இந்த மாதம் மற்றும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் விளையாட திட்டமிட்டு இருந்தது. அத்துடன் அங்கு இந்தியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய 3 நாடுகள் இடையிலான பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியும் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்து போட்டி தொடரில் இருந்து இந்திய பெண்கள் அணி விலகியது. இதனால் 3 நாடுகள் போட்டியும் ரத்து செய்யப்பட்டது.
இதனால் இந்திய பெண்கள் அணியின் விஷயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் அலட்சியமாக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நியூசிலாந்தில் பெண்கள் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்திய பெண்கள் அணி அந்த போட்டிக்கு தயாராகுவதில் இந்திய கிரிக்கெட் வாரியம் உரிய கவனம் செலுத்தாமல் இருப்பதாக கிளம்பி இருக்கும் புகார் குறித்து இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய உயர் கமிட்டி உறுப்பினருமான சாந்தா ரங்கசாமி கருத்து தெரிவிக்கையில், ‘இங்கிலாந்து தொடரில் இருந்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி விலகியதற்கு அலட்சியம் காரணம் கிடையாது. வீராங்கனைகள் போட்டிக்கான உடல் தகுதியை எட்ட குறைந்தபட்சம் 6 வார காலமாவது பயிற்சி பெற வேண்டியது அவசியமானதாகும். நமது நாட்டின் பெரும் பகுதி கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தற்போது கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம் நடத்துவது என்பது முடியாத காரியம். அத்துடன் இங்கிலாந்தில் 14 நாட்கள் வீராங்கனைகள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். கொரோனா தாக்கத்தால் உலக கிரிக்கெட் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் பெண்கள் கிரிக்கெட் மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.
இயற்கை கூட பெண்கள் கிரிக்கெட்டுக்கு எதிராக சதி செய்வது போல் தான் தெரிகிறது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. அத்துடன் ஐ.பி.எல். போட்டி நடைபெறும் சமயத்தில் தான் பிக்பாஷ் பெண்கள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அரங்கேறுகிறது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியின் போது பெண்கள் கண்காட்சி போட்டி நடைபெறுமா? என்பது தெரியவில்லை.
ஐ.பி.எல். நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறும் பெண்கள் உலக கோப்பை போட்டிக்கு தயாராக இங்கிலாந்து தொடர் முக்கியமானதாகும். கொரோனா பாதிப்பால் தற்போது நிலவும் சூழ்நிலையில் பெண்கள் கிரிக்கெட் மீதான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஈடுபாடு குறித்து சந்தேகம் கொள்ளக்கூடாது. தற்போது எந்த முடிவுக்கும் வராமல் நிலைமை சீராகும் வரை காத்து இருக்க வேண்டும்’ என்று கூறினார்.