செய்திகள்
வங்காளதேசம் நிர்ணயித்த 323 ரன் இலக்கை நூலிழையில் தவற விட்ட ஜிம்பாப்வே
வங்காளதேச அணிக்கெதிராக 323 ரன் இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே 318 ரன் சேர்த்து நான்கு ரன்னில் வெற்றியை நழுவ விட்டது.
வங்காளதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் தமிம் இக்பால் 158 ரன்கள் விளாச வங்காளதேசம் 8 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது. முஷ்பிகுர் ரஹிம் 55 ரன்களும், மெஹ்முதுல்லா 41 ரன்களும், முகமது மிதுன் ஆட்டமிழக்காமல் 32 ரன்களும் சேர்த்தனர்.
பின்னர் 323 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. ஜிம்பாப்வே அணி ஒரு கட்டத்தில் 41 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 54 பந்தில் 110 ரன்கள் தேவைப்பட்டது. திரிபானோ அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஜிம்பாப்வேயின் ரன் விகிதம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
இதனால் வங்காளதேசம் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது. கடைசி இரண்டு ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. ஷபியுல் வீசிய 49-வது ஓவரில் முட்டோம்போட்சி இரண்டு பவுண்டரிகள் அடிக்க 14 ரன்கள் சேர்த்தது ஜிம்பாப்வே.
இதனால் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அலி-அமின் ஹொசைன் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் திரிபானோ ஒரு ரன் அடித்தார். 2-வது பந்தில் வைடு மூலம் ஒரு ரன் கிடைத்தது. அதற்குப்பதிலாக வீசப்பட்ட பந்தில் முட்டோம்போட்சி ஆட்டமிழந்தார். அவர் 21 பந்தில் ஐந்து பவுண்டரியுடன் 34 ரன்கள் சேர்த்தார்.
கடைசி நான்கு பந்தில் 18 ரன்கள் தேவைப்பட்டது. 3-வது மற்றும் 4-வது பந்தை இமாலய சிக்சருக்கு தூக்கினார் திரிபானோ. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி இரண்டு பந்தில் 6 ரன்களே தேவைப்பட்டது. ஆனால் ஐந்தாவது பந்தில் திரிபானோ ரன்அடிக்கவில்லை. கடைசி பந்தில் ஒரு ரன்னே அடித்தார் திரிபானே. இதனால் ஜிம்பாப்வே நான்கு ரன் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டது. திரிபானே 28 பந்தில் 2 பவுண்டரி, ஐந்து சிக்சருடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் வங்காளதேசம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.
பின்னர் 323 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. ஜிம்பாப்வே அணி ஒரு கட்டத்தில் 41 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 54 பந்தில் 110 ரன்கள் தேவைப்பட்டது. திரிபானோ அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஜிம்பாப்வேயின் ரன் விகிதம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
இதனால் வங்காளதேசம் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது. கடைசி இரண்டு ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. ஷபியுல் வீசிய 49-வது ஓவரில் முட்டோம்போட்சி இரண்டு பவுண்டரிகள் அடிக்க 14 ரன்கள் சேர்த்தது ஜிம்பாப்வே.
இதனால் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அலி-அமின் ஹொசைன் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் திரிபானோ ஒரு ரன் அடித்தார். 2-வது பந்தில் வைடு மூலம் ஒரு ரன் கிடைத்தது. அதற்குப்பதிலாக வீசப்பட்ட பந்தில் முட்டோம்போட்சி ஆட்டமிழந்தார். அவர் 21 பந்தில் ஐந்து பவுண்டரியுடன் 34 ரன்கள் சேர்த்தார்.
கடைசி நான்கு பந்தில் 18 ரன்கள் தேவைப்பட்டது. 3-வது மற்றும் 4-வது பந்தை இமாலய சிக்சருக்கு தூக்கினார் திரிபானோ. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி இரண்டு பந்தில் 6 ரன்களே தேவைப்பட்டது. ஆனால் ஐந்தாவது பந்தில் திரிபானோ ரன்அடிக்கவில்லை. கடைசி பந்தில் ஒரு ரன்னே அடித்தார் திரிபானே. இதனால் ஜிம்பாப்வே நான்கு ரன் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டது. திரிபானே 28 பந்தில் 2 பவுண்டரி, ஐந்து சிக்சருடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் வங்காளதேசம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.