செய்திகள்
U19 உலக கோப்பை இந்திய கிரிக்கெட் அணி

U19 உலக கோப்பை: ஜப்பானை 41 ரன்னில் சுருட்டி, 29 பந்தில் சேஸிங் செய்தது இந்தியா

Published On 2020-01-21 11:20 GMT   |   Update On 2020-01-21 11:20 GMT
ஜூனியர் உலக கோப்பையில் ஜப்பானை 41 ரன்னில் சுருட்டிய இந்தியா, 4.5 ஓவரில் இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா முதல் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தியிருந்தது. இன்று 2-வது ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் களம் இறங்கிய ஜப்பான் இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. ஒரு பேட்ஸ்மேனால் கூட இரட்டை இலக்க ரன்னை எட்ட முடியாமல் ஆட்டமிழந்தனர். இதனால் 22.5 ஓவர்களே தாக்குப்பிடித்து 41 ரன்னில் சுருண்டது. மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கிய ஐந்து பேட்ஸ்மேன்கள்  டக்அவுட் ஆகினர். ரவி பிஷ்னோய் நான்கு விக்கெட்டும், கார்த்திக் தியாகி 3 விக்கெட்டும், ஆகாஷ் சிங் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 42 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால், குஷாக்ரா ஆகியோர் அதிரடியாக விளையாட இந்தியா 4.5 ஓவரில் இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 18 பந்தில் 29 ரன்களும், குஷாக்ரா 11 பந்தில் 13 ரன்களும் சேர்த்தனர்.
Tags:    

Similar News