இந்தியா

'தமிழ்நாடு பன்மொழித் தன்மையை ஏற்றுக்கொள்கிறது... திமுகதான் அதை அரசியலாக்குகிறது' - தர்மேந்திர பிரதான்

Published On 2026-02-11 19:43 IST   |   Update On 2026-02-11 19:43:00 IST
  • காலனித்துவ கால "மெக்காலே மனநிலையை" மாற்றும் நோக்கிலான சீர்திருத்தத்தை தமிழகச் சமூகம் ஏற்றுக்கொண்டது.
  • திமுகவின் எதிர்ப்பு அரசியல் இயல்பானதுதான்

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைமீதான நிலைப்பாடு என்ன என்பதை இந்தியா முழுவதும் அறிவர். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இக்கொள்கையை ஏற்றால்தான் கல்விநிதி என ஒருசில நிதிகளையும் பிடித்தம் செய்துவைத்துக்கொண்டு விடுவிக்க மறுத்து வருகிறது மத்திய அரசு.

இதுதொடர்பாக பலமுறை திமுக தலைவர்களுக்கும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் இடையே வார்த்தைபோர் நிலவியுள்ளது. அதன் விளைவுதான் தற்போது நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த எம்.பி. கமல்ஹாசனின் உரையும். தற்போதுவரை இது தொடர்கிறது. என்ன நிகழ்ந்தாலும், நிதியே ஒதுக்காவிட்டாலும் திமுக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் மேற்கொண்ட பயணங்களின் அடிப்படையில், தமிழ்நாடு மக்கள் பன்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும், திமுகதான் அதை அரசியலாக்குகிறது எனவும் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். திமுகவின் இந்த எதிர்ப்பு அரசியல் இயல்பானதுதான் என்றும், பன்மொழி அறிவு என்பது புதிய உலகின் ஒரு ஆயுதம் என்றும் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News