காங்கிரஸ் அரசு WTO முன் சரணடைந்தது: ஏழைகள், விவசாயிகளை விற்றது- ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி
- தரவு இந்தியாவில் இருக்கும் வகையில் தரவு மையங்களை அரசாங்கம் ஊக்குவிக்கிறது.
- பிரதமர் மோடி எப்போதும் இந்தியாவின் நலனுக்காகவே பேசுவார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று பட்ஜெட் மீதான விவாத்திற்கு பதில் அளித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
* வரி பகிர்வின் ஒரு பகுதியாக 2027 நிதியாண்டில் மாநிலங்களுக்கு ரூ.25.44 லட்சம் கோடியை அரசு வழங்கும்
* 2026-27-ஆம் ஆண்டிற்கான மொத்த செலவு ரூ.53.47 லட்சம் கோடியாக இருக்கும் என்று பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ளது
* நாட்டில் உரப் பற்றாக்குறை இல்லை; விவசாயிகளை ஆதரிக்க உர இறக்குமதிக்கு ரூ.1.71 லட்சம் கோடி பட்ஜெட் ஒதுக்கீடு
* அப்போது சிவசேனா (UBT) சரியான நேரத்தில் நிலம் வழங்கியிருந்தால், இந்தியாவில் புல்லட் ரயில் ஓடியிருக்கும்
* பாலுக்கு ஜிஎஸ்டி இருப்பதாக டிஎம்சி தலைவர் அபிஷேக் பானர்ஜி கூறுவது முற்றிலும் பொய்.
* மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்தவில்லை, ஆனால் இரவில் பெண்களை வீட்டிற்குள் இருக்கச் சொல்கிறார்
* மேற்கு வங்கத்தில் சட்டம் அல்ல, குண்டுகள்தான் நிலவுகின்றன
* தரவு இந்தியாவில் இருக்கும் வகையில் தரவு மையங்களை அரசாங்கம் ஊக்குவிக்கிறது
* பிரதமர் மோடி எப்போதும் இந்தியாவின் நலனுக்காகவே பேசுவார்
* காங்கிரஸ் அரசு உலக வர்த்தக அமைப்பின் முன் சரணடைந்தது. ஏழைகளையும், விவசாயிகளையும் விற்றுவிட்டது.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.