இந்தியா

பாஜக-வின் புகார் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கம்: அசாம் முதல்வர்

Published On 2026-02-11 17:41 IST   |   Update On 2026-02-11 17:41:00 IST
  • SR-க்குப் பிறகு அசாம் மாநிலத்தில் நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
  • வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்திருந்த 2.43 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் (SR) பணியின்போது, பாஜக-வின் புகார் அடிப்படையில் லட்சக்கணக்கான சந்தேகத்திற்குரிய வாக்குகள் நீக்கப்பட்டுள்ள என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வார் சர்மா தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த பணியை மேற்கொண்டது. நேற்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. வரை வாக்காளர் பட்டியில் இடம் பிடித்திருந்த 2.43 வாக்காளர்கள் பெயர்கள் இறுதிப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-

இது தொடக்கம் மட்டும்தான். SIR நடத்தப்படும்போது அதிகமான பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். அசாம் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு முதன்முறையாக இவ்வளவு மிகப்பெரிய அளவில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

சிலர் எங்களை அச்சுறுத்தவும், பயமுறுத்தவும் முயன்றனர். நாங்கள் அதை தாண்டி முன்னேறி வெற்றி பெற்றோம். எந்தெந்த வாக்காளர்களுக்கு வசிப்பிடம் இல்லையோ அதுகுறித்து புகார் கொடுத்து, எங்களுடைய பாஜக தொண்டர்கள் பூத் அளவிலான அதிகாரிகளை ஏற்க வைத்தனர்.

சட்டவிரோத வங்கதேசத்தினருக்கு (குடிபெயர்ந்தவர்கள்) எதிராக எங்களுடைய போர் தொடரும்.

இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வார் சர்மா தெரிவித்தார்.

முன்னதாக, SR நடவடிக்கையின்போது மியாஸ் முஸ்லிம்களை நெருக்கடிக்குள் வைக்க அவர்களுக்கு மட்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. சட்டவிரோத வங்கதேசத்தினருக்கு எதிராக பாஜக தொண்டர்களால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டன என்றும் ஹிமாந்தா தெரிவித்திருந்தார்.

அசாமில் பெங்கால பேசும் முஸ்லிம்களை மியாஸ் என அழைப்பார்கள். இது இழிவான சொல்லாக பார்க்கப்படுகுிறது. பெங்கால் பேசாதவர்களால் இவர்களை வங்கதேசத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என பொதுவாக அடையாளம் காணப்படுகிறது.

Tags:    

Similar News