செய்திகள்
மன்ஜோத் கல்ரா

வயது மோசடி: U-19 ஹீரோ மன்ஜோத் கல்ரா ரஞ்சி போட்டியில் விளையாட தடை

Published On 2020-01-02 13:32 IST   |   Update On 2020-01-02 13:32:00 IST
19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த மன்ஜோத் கல்ரா வயது முறைகேட்டால் ஓராண்டு தடை பெற்றுள்ளார்.
நியூசிலாந்தில் நடைபெற்ற இளையோர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் சதம் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் மன்ஜோத் கல்ரா.

இவர் ரஞ்சி கோப்பைக்கான டெல்லி அணியில் இடம் பிடிப்பதாக இருந்தார். ஆனால், கல்ரா வயது சான்றிதழில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் குறைதீர்க்கும் அதிகாரியாக இருந்த முன்னாள் நீதிபதி பதார் துரேஸ் அகமது அவருக்கு இரண்டு ஆண்டு விளையாட தடைவிதித்துள்ளார். இதன்மூலம் இந்த வருட ரஞ்சி டிராபியில் விளையாட முடியாது. ஒரு வருடம் முடிந்த பின்னர் கிளப் வகையிலான தொடர்களில் விளையாடலாம்.

ஏற்கனவே, டெல்லி அணியின் நிதிஷ் ராணா, ஹர்ஷ் தியாகி, ஷிவம் மவி, பிரஷாந்த் பண்டாரி, சரங் ராவத் ஆகியோர் இது போன்ற பிரச்சினையில் சிக்கியுள்ளனர்.

Similar News