செய்திகள்
டேவிட் வார்னர்

பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் பரிதாபம்: டேவிட் வார்னர், லாபஸ்சாக்னே மீண்டும் சதம்- ஆஸி. 302/1

Published On 2019-11-29 13:28 GMT   |   Update On 2019-11-29 13:28 GMT
டேவிட் வார்னர், லாபஸ்சாக்னே மீண்டும் சதம் விளாச அடிலெய்டு பிங்க்-பால் டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் நாளில் 1 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்துள்ளது.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடங்கியது. பிங்க்-பால் டெஸ்ட் போட்டியான இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

டேவிட் வார்னர், ஜோ பேர்ன்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜோ பேர்ன்ஸ் 4 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து டேவிட் வார்னர் உடன் லாபஸ்சாக்னே ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். டேவிட் வார்னர் 150 ரன்னைக் கடந்தார். இன்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை இருவரும் ஆட்டமிழக்கவில்லை.



ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 73 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்துள்ளது. டேவிட் வார்னர் 166 ரன்களுடனும், லாபஸ்சாக்னே 126 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்த ஜோடியை பாகிஸ்தான் பந்து வீச்சால் அவுட்டாக்க முடியாமல் திணறியது சோகமாக அமைந்தது. இருவரும் பிரிஸ்பேன் டெஸ்டிலும் சதம் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News