செய்திகள்
ரிஷப் பந்த்

சஞ்சு சாம்சனிடம் இடத்தை பறிகொடுக்க நேரிடும்: ரிஷப் பந்துக்கு லக்‌ஷ்மண் எச்சரிக்கை

Published On 2019-11-28 12:11 GMT   |   Update On 2019-11-28 12:11 GMT
இந்திய அணி உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை நியாயப்படுத்துங்கள். இல்லையெனில் சஞ்சு சாம்சனிடம் இடத்தை பறிக்கொடுக்க நேரிடும் என லக்‌ஷ்மண் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பணியில் ஜாம்பவானாக விளங்கிய எம்எஸ் டோனிக்குப் பதிலாக ரிஷப் பந்த்-ஐ இந்திய அணி நிர்வாகம் தயார் படுத்தி வருகிறது. ஆனால், சமீப காலமாக அவரது பேட்டிங் ஃபார்ம் மோசமாக உள்ளது.

இதனால் ரிஷப் பந்துக்குப் பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. இதனால் தேர்வுக்குழுவினர் மீது கடும் விமர்சனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில்தான் தவான் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அணி நிர்வாகம் மற்றும் தேர்வுக்குழு வைத்துள்ள நம்பிக்கையை ரிஷப் பந்த் நியாயப்படுத்த வேண்டும். இல்லை எனில் இடத்தை சஞ்சு சாம்சன் பறிகொடுக்க நேரிடும் என விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  லக்‌ஷ்மண் கூறுகையில் ‘‘நாங்கள் சஞ்சு சாம்சனை மாற்று வீரராக வைத்துள்ளோம் என்று இந்திய அணி தேர்வுக்குழு மற்றும் அணி நிர்வாகம் அழுத்தமான செய்தியை பதிவு செய்துள்ளது.

ரிஷப் பந்துக்கு ஏராளமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. தேர்வுக்குழுவினர் அவரை சந்தித்து அணியின் சூழ்நிலையை தெரிவிப்பார்கள்.

என்றாலும், இறுதியாக ரிஷப் பந்த் அணி நிர்வாகம் மற்றும் தேர்வுக்குழுவினர் வைத்துள்ள நம்பிக்கையை நியாயப்படுத்த வேண்டும். துரதிருஷ்டவசமாக ரிஷப் பந்தால் நிரூபிக்க முடியவில்லை. ஆனால், அணியின் முக்கிய வீரர். ரிஷப் பந்த்த களம் இறங்கி சிறந்த பந்தை சிக்சருக்கு தூக்கி அணியின் முடிவை அதிரடியாக மாற்றக்கூடியவர்.’’ என்றார்.
Tags:    

Similar News