செய்திகள்
சாயிப் ஹசன்

காலாவதியானது விசா- கொல்கத்தா ஏர்போர்ட்டில் அபராதம் செலுத்தி நாடு திரும்பிய வங்காளதேச கிரிக்கெட் வீரர்

Published On 2019-11-28 10:50 GMT   |   Update On 2019-11-28 10:50 GMT
வங்காளதேச கிரிக்கெட் வீரரான சாயிப் ஹசன் விசா முடிந்து இந்தியாவில் தங்கியிருந்த குற்றத்திற்காக கொல்கத்தா விமான நிலையத்தில் அபராதம் செலுத்திய பின் தாயகம் திரும்பினார்.
கொல்கத்தா:

வங்காளதேசம் கிரிக்கெட் அணி இம்மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்திய அணிக்கு எதிராக 3 டி20 போட்டித்தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இரண்டு தொடரையும் வங்காளதேச அணி இழந்தது. 

இரு அணிகளுக்கிடையேயான கடைசி டெஸ்ட் போட்டி, பகலிரவு ஆட்டமாக கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியின் மூன்றாம் நாளே இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அன்றிரவே வங்காளதேச அணி வீரர்கள் சிலர் தாயகம் திரும்பினர்.

டெஸ்ட் போட்டிகளில் மாற்று வீரராக பங்கேற்க வந்த சாயிப் ஹசன் கைவிரல்களிடையே ஏற்பட்ட காரணமாக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆனால் மற்ற வீரர்களுடன் தங்கியிருந்த ஹசனுக்கு தனது விசா முடிவடையும் காலம் தெரியவில்லை.

இதையடுத்து நேற்று மாலை தாயகம் செல்ல கொல்கத்தா விமான நிலையத்திற்கு சென்றபோது, அவரது விசா காலாவதியாகி இரண்டு நாட்கள் ஆகியுள்ளதை குடியுரிமை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதனால் டிக்கெட் பதிவு செய்திருந்த விமானத்தில் செல்ல அவர் அனுமதிக்கப்படவில்லை. குறிப்பிட்ட காலத்தை விட அதிகமாக தங்கியிருந்ததால் அபராதமாக ரூ.21 ஆயிரத்து 600 பணம் செலுத்திய பின் மற்றொரு விமானத்தில் ஏறி வங்காளதேசம் சென்றடைந்தார்.
Tags:    

Similar News