செய்திகள்
தெலுங்கு அணி வீரரை அவுட்டாக்கிய புனே வீரர்

புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது புனேரி பால்டன்

Published On 2019-10-03 16:44 GMT   |   Update On 2019-10-03 16:44 GMT
புரோ கபடி லீக் தொடரில் அரியானாவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது புனேரி பால்டன் அணி.
பஞ்ச்குலா :

7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அரியானாவின் பஞ்ச்குலாவில் இன்று இரவு நடந்த 119-வது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ், புனேரி பால்டன் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் புள்ளிகளை குவித்தன. ஆனாலும் முதல் பாதி முடிவில் புனேரி பால்டன் அணி முன்னிலை வகித்தது/

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் என்பதால் மிகவும் போராடி புள்ளிகளை குவித்தது. 

ஆனால் ஆட்டத்தின் கடைசியில் 53-50 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டன் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

21-வது ஆட்டத்தில் ஆடிய புனேரி பால்டன் அணி பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். அத்துடன் புள்ளிப் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 19-வது ஆட்டத்தில் ஆடிய தெலுங்கு டைட்டன்ஸ் அணி சந்தித்த 11-வது தோல்வி இதுவாகும்.

Tags:    

Similar News