செய்திகள்
சதம் அடித்த இலங்கை பேட்ஸ்மேன் குணதிலகா

3-வது ஒருநாள் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 298 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை

Published On 2019-10-02 19:30 IST   |   Update On 2019-10-02 19:30:00 IST
கராச்சியில் நடைபெற்று வரும் 3-வது நாள் கிரிக்கெட் போட்டியில் குணதிலகாவின் சதத்தால் பாகிஸ்தானுக்கு 298 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கராச்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. குணதிலகா, பெர்னாண்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

பெர்னாண்டோ நான்கு ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் திரிமானே களம் இறங்கினார். இவர் குணதிலகா உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். என்றாலும் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ந்தாலும் குணதிலகா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 134 பந்தில் 133 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் பனுகா 36 ரன்களும், ஷனகா 24 பந்தில் 43 ரன்களும் அடிக்க இலங்கை 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அமிர் 50 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 298 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.

Similar News