செய்திகள்
ஆண்டி பிளவர்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகிறார் ஆண்டி பிளவர்

Published On 2019-10-02 12:09 GMT   |   Update On 2019-10-02 12:09 GMT
ஜிம்பாப்வே அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான ஆண்டி பிளவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என செய்திகள் உலா வருகின்றன.
ஐபிஎல் டி20 லீக்கின் 2020 சீசனுக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் மாதம் நடக்கிறது. அதற்கு முன் வீரர்களை மாற்றுவது, பயிற்சியாளர்களை மாற்றுவது போன்ற பணியில் 8 அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2019 சீசனில் 7-வது இடத்தை பிடித்தது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக பேடி அப்டன் பணியாற்றினார். அவரால் ராஜஸ்தான் அணியை பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. இதனால் தலைமை பயிற்சியாளரை மாற்ற அந்த அணி முடிவு செய்துள்ளது.

புது பயிற்சியாளராக யாரை நியமிக்கலாம் என அணி நிர்வாகம் யோசித்து வரும் நிலையில், ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் ஆண்டி பிளவர் நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆண்டி பிளவர் இங்கிலாந்து அணியின் துணைப் பயிற்சியாளராகவும், தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இவர் தலைமை பயிற்சியாளராக இருந்தபோதுதான், இங்கிலாந்து அணி டி20 உலகக்கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News