செய்திகள்
பாகிஸ்தான் டி20 அணி அறிவிப்பு

பாகிஸ்தான் டி20 அணியில் மூன்று வருடத்திற்குப் பிறகு உமர் அக்மலுக்கு இடம்

Published On 2019-10-02 11:08 GMT   |   Update On 2019-10-02 11:08 GMT
இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மூன்று வருடத்திற்குப் பிறகு உமர் அக்மல் இடம் பிடித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்றுடன் முடிவடைகிறது. அதன்பின் வருகிற 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

இதற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உமர் அக்மல், அகமது ஷேசாத் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.

உமர் அக்மல் கடைசியாக 2016-ம் ஆண்டு டி20 அணியில் விளையாடினார். அதன்பின் தற்போது மூன்று வருடங்கள் கழித்து அணியில் இடம் பிடித்துள்ளார். தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் உடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்தார். மேலும் வீரர்கள் நன்னடத்தையை மீறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கியிருந்தார்.

அகமது ஷேசாத் கடந்து ஆண்டு ஜூன் மாதம் கடைசியாக அணியில் இடம் பிடித்திருந்தார். ஊக்கமருந்து உட்கொண்ட விவகாரத்தில் சிக்கிய அவருக்கு 16 மாதங்கள் இடம் கிடைக்கவில்லை. தற்போது அணியில் இடம் பிடித்துள்ளார். தொடக்க பேட்ஸ்மேன் இமாம்-உல்-ஹக் காயம் காரணமாக இடம்பெறவில்லை.
Tags:    

Similar News