செய்திகள்

ஐபிஎல்: இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து 10.6 கோடி ரூபாய் இழப்பீடு கேட்கும் மிட்செல் ஸ்டார்க்

Published On 2019-04-09 11:39 GMT   |   Update On 2019-04-09 11:39 GMT
கொல்கத்தா அணிக்காக விளையாட முடியாமல் போனதால் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் 10.6 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ஸ்டார்க் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். இவரை கடந்த 2018 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9.4 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது. ஆனால், ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் தென்ஆப்பிரிக்கா தொடரின்போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.

ஐபிஎல் தொடரில் விளையாடும்போது காயம் ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு பெறும் வகையில் இன்சூரன்ஸ் செய்திருந்தார். இதற்காக அவர் பிப்ரவரி 27-ந்தேதி முதல் மார்ச் 31 2018 வரை கவர் ஆகும் வகையில் பிரிமீயர் செலுத்தியுள்ளார். அவருடைய இன்சூரன்ஸ் மதிப்பு சுமார் 10 கோடியே 60 லட்சம் ரூபாய் ஆகும்.

தற்போது இந்த ரூபாயை வழங்க உத்தரவிடும்படி ஆஸ்திரேலியாவில் உள்ள நீதிமன்றத்தை அணுகியுள்ளார் மிட்செல் ஸ்டார்க்.
Tags:    

Similar News