செய்திகள்

அவர்கள் அழைத்தால் நான் எப்போதும் தயார்: ஹர்பஜன் சிங் சொல்கிறார்

Published On 2019-04-08 17:23 IST   |   Update On 2019-04-08 17:23:00 IST
இந்திய அணிக்கு என்னை அழைத்தால் எப்போதும் தயாராக இருக்கிறேன் என மூத்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். #IPL2019 #CSK
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். அனில் கும்ப்ளேவுக்குப் பின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக இருந்தார். அஸ்வின் வந்த பின் இந்திய அணியில் ஹர்பஜன் சிங்குக்கு இடம் கிடைக்கவில்லை. கடந்த 2015-ம் ஆண்டுக்குப்பின் சர்வதேச போட்டிக்கான இந்திய அணியில் விளையாடவில்லை.

ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார். இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் மூன்று போட்டிகளில் மட்டுமே களம் இறங்கிய ஹர்பஜன் சிங், இரண்டு முறை ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். இந்நிலையில் இந்திய அணியில் விளையாட அழைத்தால், நான் எப்போதுமே தயார்தான் என்று தெரிவித்துள்ளார்.



இந்திய ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோர் முதன்மை பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகின்றனர். டெஸ்டில் மட்டுமே அஸ்வின் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News