செய்திகள்
சதத்தை தவறவிட்ட தவறில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது அவசியம்: மயாங்க் அகர்வால்
சிட்னி டெஸ்டில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த மயாங்க் அகர்வால், சதத்தை தவறவிட்ட தவறில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது அவசியம் எனத் தெரிவித்துள்ளார். #AUSvIND
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. தொடக்க வீரரான மயாங்க் அகர்வால் மெல்போர்ன் டெஸ்டில் அறிமுகம் ஆனார். முதல் இன்னிங்சில் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இன்று நடைபெற்ற சிட்னி டெஸ்டிலும் 77 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த அவர், நாதன் லயன் பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். இரண்டு போட்டியிலும் சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தும் தவறவிட்டார். இந்நிலையில் தவறில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது அவசியம் என்ற மயாங்க் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இன்றைய முதல்நாள் ஆட்டம் முடிவடைந்த பிறகு மயாங்க் அகர்வால் இதுகுறித்து கூறுகையில் ‘‘மிகப்பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் போனதால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். இதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நான் இந்த தவறை மீண்டும் செய்யாமல் இருந்தால், அது சிறந்த பாடமாக இருக்கும். நாதன் லயன் பந்தை அதிரடியாக விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஒர்க் அவுட் ஆகவில்லை. என்னுடைய விக்கெட்டை இழந்ததற்காக மிகவும் ஏமாற்றமடைந்தேன்’’ என்றார்.
இன்று நடைபெற்ற சிட்னி டெஸ்டிலும் 77 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த அவர், நாதன் லயன் பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். இரண்டு போட்டியிலும் சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தும் தவறவிட்டார். இந்நிலையில் தவறில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது அவசியம் என்ற மயாங்க் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இன்றைய முதல்நாள் ஆட்டம் முடிவடைந்த பிறகு மயாங்க் அகர்வால் இதுகுறித்து கூறுகையில் ‘‘மிகப்பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் போனதால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். இதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நான் இந்த தவறை மீண்டும் செய்யாமல் இருந்தால், அது சிறந்த பாடமாக இருக்கும். நாதன் லயன் பந்தை அதிரடியாக விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஒர்க் அவுட் ஆகவில்லை. என்னுடைய விக்கெட்டை இழந்ததற்காக மிகவும் ஏமாற்றமடைந்தேன்’’ என்றார்.