செய்திகள்

முதல் ஒருநாள் கிரிக்கெட்: இலங்கையை 45 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து

Published On 2019-01-03 09:34 GMT   |   Update On 2019-01-03 09:34 GMT
மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து #NZvSL
மவுண்ட் மவுங்கானுய்:

நியூசிலாந்து - இலங்கை இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

கொலின் முன்றோ 13 ரன்னில் வெளியேறினார். அடுத்து கப்தில் உடன் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேன் வில்லியம்சன் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மார்ட்டின் கப்தில் 139 பந்தில் 138 ரன்கள் விளாசி வெளியேறினார்.


நீசம்

அதன்பின் வந்த ராஸ் டெய்டர் 54 ரன்களும், நீசம் ஆட்டமிழக்காமல் 47 ரன்களும் அடிக்க நியூசிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது.

பின்னர் 372 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. தொடக்க வீரர்களான டிக்வெல்லா (76), குணதிலகா (43) ஆகியோர் சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். அதன்பின் குசால் பெரேரா அற்புதமாக விளையாடினார்.


குணதிலகா

ஆனால் குசால் மெண்டிஸ் (18), சண்டிமல் (10), குணரத்னே (11), திசாரா பேரேரா (4) சொற்ப ரன்களில் வெளியேற இலங்கை அணியின் தோல்வி உறுதியானது. குசால் பெரேரா 86 பந்தில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் இலங்கை 49 ஓவரில் 326 சேர்த்து  ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Tags:    

Similar News