செய்திகள்

நாளை 2-வது டெஸ்ட் தொடக்கம்- வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து

Published On 2018-11-13 06:02 GMT   |   Update On 2018-11-13 06:02 GMT
இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் நாளை பல்லேகெலேயில் தொடங்குகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து களம் இறங்குகிறது. #SLvENG
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதேபோல ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டத்திலும் அந்த அணியே வெற்றி பெற்றது.

3 போட்டிகள் கொண்ட டிடெஸ்ட் தொடரில் கொழும்பில் நடந்த முதல் டெஸ்டிலும் இங்கிலாந்து 211 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து- இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பல்லேகெலேயில் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்டிலும் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் இங்கிலாந்து இருக்கிறது. இலங்கை அணி பதிலடி கொடுத்து சமன் செய்யும் வேட்கையில் உள்ளது. அந்த அணி கேப்டன் சன்டிமால் காயத்தால் இதில் ஆடவில்லை.
Tags:    

Similar News