செய்திகள்

ஐ.எஸ்.எல். கால்பந்து - புனேவை விழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னையின் எப்.சி.

Published On 2018-11-06 22:54 GMT   |   Update On 2018-11-06 22:54 GMT
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் புனேவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னையின் எப்.சி. அணி. #ISL2018 #FCPuneCity #ChennaiyinFC
5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி மற்றும் எப்.சி புனே சிட்டி அணிகள் மோதின.

ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் புனே அணியை சேர்ந்த ஆஷ் குர்னியன் முதல் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சென்னை அணியை சேர்ந்த மாலிசன் ஆல்வ்ஸ் 54-வது நிமிடத்திலும், கிரிகோரி நெல்சன் 56-வது நிமிடத்திலும், இனிகோ கால்டெரின் 69-வது நிமிடத்திலும், தோய் சிங் 72வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு வலு சேர்த்தனர்.

ஆட்டத்தின் இறுதியில் புனே அணியை சேர்ந்த ஜோனாதன் 90-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இதன்மூலம், சென்னையின் எப்.சி அணி 4- 2 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. #ISL2018 #FCPuneCity #ChennaiyinFC
Tags:    

Similar News