செய்திகள்

ஐ.எஸ்.எல். கால்பந்து - சென்னையின் எப்.சி. அணியை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது எப்.சி கோவா

Published On 2018-10-06 18:45 GMT   |   Update On 2018-10-06 18:45 GMT
சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி அணியை 3 -1 என்ற கோல் கணக்கில் எப்.சி. கோவா அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #ChennaiyinFC #FCGoa
சென்னை:

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி, எப்.சி. கோவா அணிகள் மோதின.

ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் கோவா அணியின் எடு பெடியா முதல் கோலை அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 53-வது நிமிடத்தில் கோவா அணியின் பெரான் கரோமினாஸ் ஒரு கோலும், 80-வது நிமிடத்தில் மோர்டடா பால் ஒரு கோலும் அடித்தனர். இதனால் கோவா அணி 3 - 0 என முன்னேறியது. 
 
கடைசியாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் இறுதியில் சென்னையி எப்.சி அணி சார்பில் ஈலி சபியா ஒரு கோல் அடித்தார்.

இறுதியில், சென்னையின் எப்.சி அணியை 3-1 என்ற கணக்கில் கோவா அணி வீழ்த்தி வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தது. #ISL2018 #ChennaiyinFC #FCGoa
Tags:    

Similar News