செய்திகள்

4-வது ஆட்டத்தில் யுவான்டஸ் அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

Published On 2018-09-17 11:32 GMT   |   Update On 2018-09-17 11:32 GMT
‘செரி ஏ’ லீக்கின் 4-வது ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது முதல் கோலை யுவான்டஸ் அணிக்காக பதிவு செய்தார். #Ronaldo
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் போர்ச்சுக்கல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஸ்பெயின் லா லிகா ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்த இவர், தற்போது இத்தாலியில் உள்ள யுவான்டஸ் அணிக்கு மாறியுள்ளார்.

ரொனால்டோ ‘செரி ஏ’ சீசனில் யுவான்டஸ் அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் பங்கேற்றார். ஆனால் மூன்று போட்டிகளிலும் கோல் அடிக்காமல் ஏமாற்றம் அளித்தார்.

யுவான்டஸ் அணிக்காக கோல் கணக்கை தொடங்காத ரொனால்டோ, நேற்று 4-வது ஆட்டத்தில் சஸ்சுவோலா அணிக்கெதிராக களம் இறங்கினார்.

முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அதன்பின் 2-வது பாதி நேரத்தில் யுவான்டஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோலை அடித்தார். இதன்மூலம் யுவான்டஸ் அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார். அத்துடன் அல்லாமல் 65-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோலை பதிவு செய்தார்.



சஸ்சுவோலா அணியைச் சேர்ந்த கவுமா பாபகார் இன்ஜூரி நேரமான 91-வது நிமிடத்தில் கோல் அடிக்க யுவுான்டஸ் 2-1 என வெற்றி பெற்றது. தொடக்க கோல் அடித்ததுடன் அணியை வெற்றி பெறவும் வைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

இந்த வெற்றியின் மூலம் யுவான்டஸ் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிளுடன் முதல் இடத்தில் உள்ளது. நபோலி 9 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
Tags:    

Similar News