செய்திகள்

ஆர்சிபி அணியில் தலைமை பயிற்சியாளராக பணிபுரிய உள்ளேன்- ஆஷிஷ் நெஹ்ரா

Published On 2018-09-05 12:16 GMT   |   Update On 2018-09-05 12:16 GMT
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் தலைமை பயிற்சியாளராக பணிபுரிய உள்ளேன் என்று ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஆஷிஷ் நெஹ்ரா. இவர் கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகள் உள்பட அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

அதன்பின் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்து வீச்சு ஆலோசகராக செயல்பட்டார். 2018 சீசனில் ஆர்சிபி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி உள்பட அனைவரும் அதிரடியாக நீக்கப்பட்டனர்.



தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் ஆன கேரி கிர்ஸ்டனை தலைமை பயிற்சியாளராக நியமித்தது. இந்நிலையில் ஆர்சிபி அணியில் தான் பந்து வீச்சு பயிற்சியாளராகவும், கேரி கிர்ஸ்டனுடன் இணைந்து தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட போவதாக ஆஷிஷ் நெஹ்ரா  தெரிவித்துள்ளார்.

ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், புனே வாரியர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
Tags:    

Similar News