செய்திகள்

டிரென்ட் பிரிட்ஜ் வெற்றியை கேரளா வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு அர்பணித்த இந்திய அணி

Published On 2018-08-22 11:43 GMT   |   Update On 2018-08-22 11:43 GMT
டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இங்கிலாந்தை 203 ரன்னில் வீழ்த்தி பெற்ற வெற்றியை இந்திய அணி கேரளா வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு அர்ப்பணித்துள்ளது. #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிர்ட்ஜியில் நடைபெற்றது. இதில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தயா 1-2 என தொடரில் பின்தங்கியுள்ளது.



டிரென்ட் பிரிட்ஜியில் பெற்ற வெற்றியை கேரளா வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு அர்ப்பணிப்பதாக இந்திய அணி கேப்டன் கூறியுள்ளார்.



இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘இந்திய கிரிக்கெட் அணியாக நாங்கள், இந்த வெற்றியை கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறோம். இந்திய அணியாக எங்களால் செய்ய முடிந்த சிறிய விஷயம். கேரளாவில் தற்போது கடினமான நேரம்’’ என்றார்.
Tags:    

Similar News